» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நான் முதல்வன் திட்டம்: ஜப்பானில் பயிற்சி பெற சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி தேர்வு!
புதன் 18, மார்ச் 2026 10:38:40 AM (IST)
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள உயர்தரப் பயிற்சியில் பங்கேற்க சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையில் பயின்று வரும் மாணவி அகஸ்டா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) நடத்திய சிறப்புப் பயிற்சியில் பங்கேற்றார். இதில் இவரது சிறப்பான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, சிறந்த இளங்கலை திறமையாளர்களுக்கான (SCOUT-TN) திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டிற்குச் சென்று இரண்டு வார காலப் பயிற்சி பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம், வரும் மார்ச் 15 முதல் மார்ச் 27 வரை ஜப்பானில் நடைபெறும் நவீனத் தொழில்நுட்பப் பயிற்சிகளில் மாணவி அகஸ்டா கலந்துகொள்கிறார். சர்வதேச அளவில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கத் தேர்வானது கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
ஜப்பான் செல்லத் தேர்வான மாணவியைப் பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜோசப் சுரேஷ் மற்றும் மூத்த பேராசிரியர் ஜமுனா ராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் கலந்துகொண்டு மாணவி அகஸ்டாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








