» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாஜக தலைமை அனுமதித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: தமிழிசை பேட்டி
புதன் 18, மார்ச் 2026 8:06:29 AM (IST)
கட்சித் தலைமை முடிவு செய்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: "திருமாவளவன் போன்ற தலைவர்கள், நாங்கள் கூட்டணிக்காக மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், பாஜக சார்பில் கூட்டணி குறித்து யாருக்கும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதவாதம் மற்றும் மதக்கலவரங்கள் ஏற்படும் எனத் திட்டமிட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.""வருகிற 19-ஆம் தேதி பாஜகவின் தேர்தல் அறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் பிறகு முறைப்படி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். கட்சித் தலைமை விரும்பினால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்," என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








