» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் : முன்னாள் கணவர் கைது!!

வியாழன் 12, மார்ச் 2026 8:03:48 AM (IST)

கோவில்பட்டியில் விவாகரத்து பெற்ற பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவரது முன்னாள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மக்கனி (32). இவருக்கும், இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதான சேர்மக்கனி சிறைக்குச் சென்றார். இதனால் அவரது மனைவி நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த சேர்மக்கனி, தனது முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேர்மக்கனியைப் புதன்கிழமை அன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory