» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்புச் சொற்பொழிவு!

ஞாயிறு 8, மார்ச் 2026 7:57:01 PM (IST)



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தகப் பார்வை மற்றும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநகரக் கிளைச் செயலாளர்  ஆ. மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் ஐ.பெ. பாலசேகர் தலைமை வகித்து உரையாற்றுகையில், கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகள்,  ஜீவாவின் இலக்கியப் பங்களிப்பு மற்றும் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசினார்.

சிறப்புரை: தூத்துக்குடி மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவர் T. மலர்விழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் பேசுகையில், "பெண்களின் வளர்ச்சிக்குத் தெளிவான சிந்தனை, தைரியம், நேர்மை மற்றும் நன்றியுணர்வு ஆகியவை மிக அவசியம்" என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற புத்தகப் பார்வை நிகழ்ச்சியில், "பேத்தி கேட்ட கதை" எனும் சிறுகதை நூல் குறித்து ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி கணிதவியல் துறை மாணவிகள் தேவி மற்றும் துர்கா தேவி ஆகியோர் தாங்கள் வாசித்து உணர்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

எழுத்தாளர் பேராசிரியர் கணியன் செல்வராஜ் தனது ஏற்புரையில், "மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழப் பழக வேண்டும். வன உயிரினங்களைப் பாதுகாப்பதோடு, அவற்றிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் செல்ல மாரியப்பன், லோகநாதன், பத்மநாதன், பாலமுருகன், ஆசிரியர் ராஜகுமார் சாமுவேல், குமிழ்முனை சைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளர்  அ. ரவி மற்றும் ஸ்பிக் செல்வின் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். நிறைவாகத் தருவைக்குளம் கிளைச் செயலாளர்  லாரன்ஸ் நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory