» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை மிரட்டல் வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:34:32 PM (IST)
தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு கொலை மிரட்டல் வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி காளியப்பன் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மேற்படி திருச்செந்தூர் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் போலீசார் அவரை நேற்று (02.02.2026) திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேற்படி வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் நேற்று காளியப்பன் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் போது மற்றொரு வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் இன்னோஷ்குமார் மற்றும் காவல்துறையினரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் வனிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த காளியப்பன் (30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி காளியப்பன் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மேற்படி திருச்செந்தூர் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் போலீசார் அவரை நேற்று (02.02.2026) திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேற்படி வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் நேற்று காளியப்பன் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் போது மற்றொரு வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் இன்னோஷ்குமார் மற்றும் காவல்துறையினரையும், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் வனிதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









