» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி

செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:58:51 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் மகன் தடிகாரன் (20), மரம் வெட்டும் தொழிலாளி. இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து அல்லிகுளத்திற்கு  பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேலக்கூட்டுடன் காடு, மங்களகிரி விலக்கு அருகே சென்றபோது சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் தடிகாரன் மற்றும சாலையில் நடந்து சென்ற மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory