» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்டு: எஸ்பி நடவடிக்கை!
திங்கள் 2, பிப்ரவரி 2026 8:06:16 AM (IST)
பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் பணியின் போது, கவனமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத வகையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பணியில் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் ஏட்டு அண்ணாத்துரை, குளத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், முத்தையாபுரம் ஏட்டு தனுஷ்கோடி ஆகியோர் மீது எஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த 3பேரும் பணியில் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி சூப்பிரண்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் அந்த 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









