» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபோதையில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்டு: எஸ்பி நடவடிக்கை!

திங்கள் 2, பிப்ரவரி 2026 8:06:16 AM (IST)

பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சஸ்பெண்டு செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் போலீசார் பணியின் போது, கவனமாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத வகையில் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று எஸ்பி சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார். 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பணியில் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் ஏட்டு அண்ணாத்துரை, குளத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், முத்தையாபுரம் ஏட்டு தனுஷ்கோடி ஆகியோர் மீது எஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இதில் அந்த 3பேரும் பணியில் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி சூப்பிரண்டு உத்தரவிட்டார். தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் அந்த 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory