» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: மேலும் ஒருவர் காயம்!
சனி 31, ஜனவரி 2026 11:34:34 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் மகன் ஜெனித் (32), இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மேலமடம் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெனித் மற்றும் தனபால் ஆகிய இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனித் பரிதாபமாக இறந்தார். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ் மகன் ஜெனித் (32), இவர் நேற்று தனது மோட்டார் பைக்கில் புதியம்புத்தூரில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். மேலமடம் அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது எதிரே சாமிநத்தம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் தனபால் (70) என்பவர் ஓட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெனித் மற்றும் தனபால் ஆகிய இருவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெனித் பரிதாபமாக இறந்தார். தனபால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









