» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரி வெட்டிக் கொலை: நண்பர் வெறிச்செயல்!
சனி 31, ஜனவரி 2026 8:00:29 AM (IST)
கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரியை வெட்டிக் கொன்ற அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் மாரீஸ்வரன் (43). கோலப்பொடி வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டின் அருகே வாசிப்பவர் முத்தையா மகன் ராமசாமி (75). கூலித் தொழிலாளியான இவரும், மாரீஸ்வரனும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் இருவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி அரிவாளை எடுத்து மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாரீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ராமசாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாரீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய ராமசாமியை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் அதற்குள் அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரண் அடைந்தார். ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









