» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் பிடிவாரண்ட் : தலைமறைவாக இருந்து வந்த நபர் கைது!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:36:24 PM (IST)
கழுகுமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கழுகுமலையை சேர்ந்த சாமிநாதன் (38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்த நிலையில் சாமிநாதன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 16.09.2025 அன்று மேற்படி நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து சாமிநாதனை தேடிவந்தனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சாமிநாதனை இன்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









