» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 7பேர் கைது : கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:34:02 PM (IST)
தூத்துக்குடியில் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 7பேரை போலீசார் கைது செய்தனர். 150 கிராம் கஞ்சா, 12 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோமஸ்புரம் பகுதியில் கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதி்ல் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான காசிமுனியசாமி (30), ஜோ பிரகாஷ் (43), மரிய மைக்கேல் திணேஷ் (27), இசக்கிபாலன் (25), பால சசிகுமார் (20), ஜோ கிங்ஸ்டன் (27), சிலுவை பீட்டர் விமல் (44) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 7பேரையும் கைது செய்தும், ஒரு இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, 12 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









