» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொடர்ந்து 5 நாட்களாக பதிவுத் துறை சர்வர் முடக்கம் : ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கண்டனம்
வெள்ளி 30, ஜனவரி 2026 3:10:41 PM (IST)
தொடர்ந்து 5 நாட்களாக பதிவுத் துறை சர்வர் முடங்கியுள்ளதற்கு ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.முத்துராமன் வெளியிட்ட அறிக்கையில், பதிவுத்துறையின் STAR 3.0 வரமாக மாறாதது ஏன்? தொடரும் சர்வர் கோளாறுகளின் பின்னணி என்ன? கடந்த பத்து தினங்களாக,பதிவுத்துறை தொடர்ச்சியான தொழில்நுட்பக் குளறுபடிகளில் சிக்கியுள்ளது.
பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள், விவசாயிகள், வீடு வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் துறையினர் எனஅனைவரும் தினமும் கடுமையான துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு, முழுமையான சோதனை மற்றும் தயார் நிலையில் இல்லாமல், அவசரகோலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட STAR 3.0 மின்னணு அமைப்பு, இன்று பதிவு அலுவலகங்களில் தொடர்ச்சியான சர்வர் மற்றும்தொழில்நுட்ப கோளாறுகளுக்கு காரணமாக மாறியுள்ளது.
ஒரு நாள் சர்வர் இல்லை,மற்றொரு நாள் ஸ்லாட் இல்லை,மறுநாள் ஆவணங்கள் அப்லோடு ஆகவில்லை இதன் விளைவாக,பதிவு செய்ய முடியாமல்பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். டிஜிட்டல் மாற்றம் வரவேற்கத்தக்கதே. ஆனால்,முழுமையான தயார் இல்லாத நிலையில் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு சுமையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
STAR 3.0 உண்மையில் பொதுமக்களுக்கு வரமாக மாற வேண்டுமா? அல்லது தொடர்ந்த துயரங்களுக்குகாரணமான சாபமாக மாறிவிடுமா? இதற்கு விரைந்து நிரந்தர தீர்வு காண்பதே இன்றைய அவசியமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.முத்துராமன் வெளியிட்ட அறிக்கையில், பதிவுத்துறையின் STAR 3.0 வரமாக மாறாதது ஏன்? தொடரும் சர்வர் கோளாறுகளின் பின்னணி என்ன? கடந்த பத்து தினங்களாக,பதிவுத்துறை தொடர்ச்சியான தொழில்நுட்பக் குளறுபடிகளில் சிக்கியுள்ளது.பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள், விவசாயிகள், வீடு வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் துறையினர் எனஅனைவரும் தினமும் கடுமையான துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு, முழுமையான சோதனை மற்றும் தயார் நிலையில் இல்லாமல், அவசரகோலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட STAR 3.0 மின்னணு அமைப்பு, இன்று பதிவு அலுவலகங்களில் தொடர்ச்சியான சர்வர் மற்றும்தொழில்நுட்ப கோளாறுகளுக்கு காரணமாக மாறியுள்ளது.
ஒரு நாள் சர்வர் இல்லை,மற்றொரு நாள் ஸ்லாட் இல்லை,மறுநாள் ஆவணங்கள் அப்லோடு ஆகவில்லை இதன் விளைவாக,பதிவு செய்ய முடியாமல்பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். டிஜிட்டல் மாற்றம் வரவேற்கத்தக்கதே. ஆனால்,முழுமையான தயார் இல்லாத நிலையில் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு சுமையாக மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
STAR 3.0 உண்மையில் பொதுமக்களுக்கு வரமாக மாற வேண்டுமா? அல்லது தொடர்ந்த துயரங்களுக்குகாரணமான சாபமாக மாறிவிடுமா? இதற்கு விரைந்து நிரந்தர தீர்வு காண்பதே இன்றைய அவசியமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









