» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் : போலீஸ் குவிப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:34:52 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்புரவு பணியாளர்கள் மீது தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தூய்மை பணியாளர்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தர சட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு ஆணைப்படி ஓட்டுனர்களுக்கு மாத ஊதியம் 24 ஆயிரத்து 90 ரூபாயும், தூய்மை பணியாளர்களுக்கு 20 ஆயிரத்து 460 ரூபாயும் வழங்க வேண்டும். பிஎப் பணத்தை அரசு விதிமுறைப்படி நிர்வாக பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஊதியத்துடன் வார விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உபகரணங்கள், சீருடைகள், ரெயின் கோர்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்புரவு பணியாளர்கள் மீது தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தூய்மை பணியாளர்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தர சட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசு ஆணைப்படி ஓட்டுனர்களுக்கு மாத ஊதியம் 24 ஆயிரத்து 90 ரூபாயும், தூய்மை பணியாளர்களுக்கு 20 ஆயிரத்து 460 ரூபாயும் வழங்க வேண்டும். பிஎப் பணத்தை அரசு விதிமுறைப்படி நிர்வாக பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஊதியத்துடன் வார விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உபகரணங்கள், சீருடைகள், ரெயின் கோர்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









