» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக கப்பல் கட்டுமான நிறுவனம்: தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமைப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 8:16:23 AM (IST)
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக கப்பல் கட்டுமான நிறுவனம் ஒன்று தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நாட்டின் 12 முன்னனி துறைமுகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் 2-வது பெரிய துறைமுகம் மற்றும் நாட்டின் 3-வது பெரிய கொள்கலன் துறைமுகமாக வ.உ.சி. துறைமுகம் விளங்குகிறது.
இது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு சேவைகளைக் கொண்டுள்ளது. 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் வ.உ.சி. துறைமுகம் முற்றிலும் உள்நாட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட செயற்கை துறைமுகமாகும்.
நாட்டில் கொல்கத்தா, கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களில் 30 கப்பல் கட்டுமான நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வணிகம் மற்றும் கப்பல்படைக்கு தேவையான கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் லார்சன் மற்றும் டுப்ரோ (எல் அன்ட் டி) என்ற தனியார் நிறுவனம் சார்பில் எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் புதிதாக கப்பல் கட்டும் நிறுவனத்தை அமைக்க மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து வ.உ.சி. துறைமுகம் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தலா 50 சதவீத பங்குகளுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய கப்பல்கட்டுதளம் மற்றும் கனரக தொழிற்சாலை என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனமாக பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு சூழலை வலுப்படுத்தப் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடல் சார் அடித்தள வசதிகளை ஆழப்படுத்தவும் மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்த இந்த முயற்சி துணைபுரியும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத்தின் ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோகித், "இந்த கூட்டு முயற்சி, வ.உ.சி. துறைமுகத்துக்கும் இந்தியாவின் கடல்சார் கனவுகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய மைல்கல்லாகும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









