» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.82 கோடி: 1 கிலோ தங்கமும் கிடைத்தது

புதன் 17, டிசம்பர் 2025 8:11:11 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.81 கோடி பணம் மற்றும்  1 கிலோ 139 கிராம் தங்கம் கிடைத்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் மாத உண்டியல் எண்ணும் பணி, கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமையில் நடந்தது. இணை ஆணையர் க.ராமு முன்னிலை வகித்தார். 

இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் தங்கம், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் கருப்பன், சிவகாமி, ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணியில் அயற்பணி, கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதன்படி, உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாயும் (ரூ. 3,81,96,785), தங்கம் 1 கிலோ 139 கிராம், வெள்ளி 18 கிலோ 52 கிராம், பித்தளை 36 கிலோ 888 கிராம், செம்பு 1.9 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத் தாள்கள் 815-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory