» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டுப்பன்றிகள் மீது பைக்குகள் மோதல்: 3 பேர் காயம்!

புதன் 17, டிசம்பர் 2025 8:06:20 AM (IST)

கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 மேளக்கலைஞர்கள் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மேளக்கலைஞர் பொன்னுச்சாமி(63). இவரும், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் செல்லத்துரை(28), தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் கண்ணன்(20) ஆகிய மேளக்காரர்களும், நேற்று கலியாவூருக்கு, 2 இருசக்கர வாகனத்தில் சென்றனராம்.

தேசிய நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி பகுதியில் சென்றபோது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதாம். இதில், காயமடைந்த 3 பேரையும் கயத்தாறு போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory