» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவு சார்-பதிவாளர்கள் பணியிடமாற்றம்: இணைப் பதிவாளர் உத்தரவு!

செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:15:38 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சார்-பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து இணைப் பதிவாளர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த அந்தோணிபட்டுராஜ் மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் சரக கூட்டுறவு சார்-பதிவாளராக பணியாற்றி வந்த இளன்மாறன் தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த பாலமுருகன் ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த பொன்மாரி தூத்துக்குடி துணைப் பதிவாளர் கள அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர்கள் உடனடியாக தங்களது பணியில் சே வேண்டும் என்றும் இணை பதிவாளர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory