» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழவண்டியை சேதப்படுத்திய மீன்கடைக்காரர் கைது

வியாழன் 11, டிசம்பர் 2025 8:20:22 AM (IST)

தூத்துக்குடியில் பழவண்டியை சேதப்படுத்தி வியாபாரியை தாக்கியதாக மீன் கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த அருள் மாணிக்கம் மகன் மிக்கேல் ராஜ் (32). இவர் லோடு ஆட்டோவில் பழம் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் இவர் முத்தையாபுரம் வடக்கு தெரு சந்திப்பு அருகே பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு மீன் கடை வைத்திருந்த முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சங்கர்ராஜ் மகன் புகழேந்தி (25), இங்கு பழக்கடை வைக்க கூடாது என்று கூறியவாறு தகராறு செய்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர் சென்று விட்டார். அன்று மாலையில் இரும்பு கம்பியுடன் வந்த புகழேந்தி, திடீரென பழவண்டியை அடித்து சேதப்படுத்தினார். இதை தடுக்க முயன்ற தொழிலாளி அசாருதீன் என்பவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory