» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

வியாழன் 11, டிசம்பர் 2025 8:08:47 AM (IST)

தூத்துக்குடியில் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி  முத்தையாபுரம் பி.டி. ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மாசாணமுத்து (38). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில், பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (20) என்பவர் திடீரென மாசானமுத்துவை காலால் மிதித்து விட்டு சென்றாராம். 

இதை கண்டித்த அவரிடம் அரிவாளை காட்டி சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory