» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டினமருதூரில் பாதுகாக்கப்பட்ட குதிரை லாட பதிவுகள் கண்டெடுப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 7:39:58 AM (IST)

தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில் பல பாதுகாக்கப்பட்ட குதிரை லாட பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தூத்துக்குடியடைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி முன்னெடுப்பில் வேப்பலோடை-பனையூர் பகுதி கடல்சார் எச்சங்கள் மற்றும் பட்டினமருதூரில் அறிவிக்கப்பட்ட தொல்லியல் தளத்தைப் பார்வையிட, சுதாகர் தலைமையிலான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குழுவினர் மற்றும் கடல்சார் உயிரியல் ஆய்வாளர் முனியாண்டி பாலு ஆகியோர் வந்தனர். அவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அனைத்து கலைப்பொருட்களையும் கவனித்து குறித்துக் கொண்டனர்.
புல எண் 40ல் தொல்லியல் களம் பகுதியைப் பார்வையிட்டபோது, தொல்லியல் பேராசிரியர் மதிவாணன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் மீனா ஆகியோர் அருகருகே உள்ள வெவ்வேறு இடங்களில் குதிரை லாடத்தின் சில பதிவுகளை அடையாளம் கண்டனர். இதன் அருகே சுமார் 1.5அங்குலம் விட்டம் கொண்ட இரும்பு வளையம் மற்றும் அறுத்த சங்கினை தேய்க்க பயன்படும் தேய்ப்பு கல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தப் பாதுகாக்கப்பட்ட குதிரை லாடப் பதிப்பு இடங்களின் புவியியல் ஒருங்கிணைப்பு புள்ளிகளை நாம் இணைக்கும்போது, அவை நமது தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு முந்தைய நாட்களில் ஆவணப்படுத்தப்பட்ட பண்டைய சாலை அமைப்புகளுடன் நேரான கோட்டில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மார்க்க போலோ தனது வரலாற்று பதிவுகள் வாயிலாக இந்த கீழ் பட்டினம் பகுதியின் தொழில்முறை, கலாச்சாரம், பண்பாடு, வானவியல் அறிவியல், செல்வ செழிப்பு, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பூமி, ஆண்டிற்கு 1400 குதிரைகள் இறக்குமதி என்ற பல்வேறு விடையங்களை நமக்கு தந்துள்ளார்.

எனவே இந்த பண்பட்ட குதிரைகளின் கால் தடம் பதிவுகள் நமக்கு 13ம் நூற்றாண்டின் மார்க்க போலோவின் குதிரை வணிக கூற்றிற்கு சான்றாக அமையுமா! அல்லது இன்னும் பின்னேக்கிய வரலாற்றிற்கு சான்றாக அமையுமா! என்பது முழுமையான தொல்லியல் மற்றும் பூகோள வியல் ஆய்விற்கு பின் தெரியவரும் என்றார்கள். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட ஆட்சியர் வாயிலாக பரிந்துரை செய்யப்பட்ட பனையூர் கடல்சார் எச்சங்கள் பகுதி மற்றும் அறிவிக்கப்பட்ட பட்டினம் மருதூர் தொல்லியல் கள பகுதிகளை உடனடியாக முதலில் பாதுகாத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டி அரசிற்கு தங்களது கோரிக்கைகளை பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்றவர் கைது
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:02:13 AM (IST)

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு: மகன் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:01:00 AM (IST)

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)

கணவரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:54:19 AM (IST)

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நாள் மாற்றம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:39:39 AM (IST)

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)










