» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாமனாரை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் : குடும்பத் தகராறில் பயங்கரம்!

ஞாயிறு 2, நவம்பர் 2025 11:10:02 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 1ம் ரயில்வே கேட் அருகேயுள்ள சுடலை கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ஆறுமுகம் என்ற ஆசீர்வாதம் (56), இவர் மனைவி ஜெயலட்சுமியை பிரிந்து கடந்த 15 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார். இதனால் தன்னை கவனிக்காமல் தனியாக விட்டு விட்டதாக மனைவி மகளிடம் குடிபோதையில் அடிக்கடி சண்டை போடுவாராம். 

இதுபோல் நேற்றிரவு அவர் தகராறு செய்துள்ளார். இதனை அவரது மருமகன் கோபால் மகன் அஜய் என்ற ஜடேஜா (25) என்பவர் தட்டி கேட்டாராம் இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் சிவன் கோவில் நேரடி அருகே நின்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மருமகனை ஆறுமுகம் அரிவாளால் வெட்டினாராம். இதில் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மாமனாரை தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் என்ற ஆசீர்வாதம் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய சப்  இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி கொலை வழக்குப் பதிவு செய்து அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory