» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:34:26 AM (IST)

கழுகுமலையில் காவல் நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை யாதவர் தெருவைச் சேர்ந்த சின்ன மாரியப்பன் என்ற சின்னத்துரை மகன் செல்வகுமார் (23). இவர், கழுகுமலை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இருக்கிறார்களா என கேட்டு, அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory