» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:34:26 AM (IST)
கழுகுமலையில் காவல் நிலையத்திற்கு சென்று பணியில் இருந்த பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை யாதவர் தெருவைச் சேர்ந்த சின்ன மாரியப்பன் என்ற சின்னத்துரை மகன் செல்வகுமார் (23). இவர், கழுகுமலை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் இருக்கிறார்களா என கேட்டு, அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










