» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கைதிக்கு கஞ்சா சப்ளை: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:33:19 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முரளிதரன்(25). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்ஸோ வழக்கில் கைதாகி, தூத்துக்குடி பேரூரணி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு மர்ம நபர், முரளிதரனுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம், அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory