» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து மனைவி உயிரிழப்பு!

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:31:03 AM (IST)

கோவில்பட்டியில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே தவறி விழுந்ததில் மனைவி  பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுசீலா (63). இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கதிரேசன் கோயில் சாலை, மேட்டு காளியம்மன் கோயில் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த சுசீலா தவறி கீழே விழுந்தாராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சுசீலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory