» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவருடன் பைக்கில் சென்றபோது தவறி விழுந்து மனைவி உயிரிழப்பு!
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:31:03 AM (IST)
கோவில்பட்டியில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே தவறி விழுந்ததில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுசீலா (63). இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கதிரேசன் கோயில் சாலை, மேட்டு காளியம்மன் கோயில் அருகே உள்ள வேகத்தடையை கடந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த சுசீலா தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சுசீலா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










