» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி அருகே வாளுடன் திரிந்த வாலிபர் கைது!

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:27:35 AM (IST)

கோவில்பட்டி அருகே ஒருவரை கொலை செய்வதற்காக வாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார், நேற்று மந்திதோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திரா காலனியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் வாள் வைத்திருப்பது தெரியவந்ததாம்.

விசாரணையில், மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் என்ற சிவா (25) என்பதும், முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory