» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர் : மீனவர்கள் மகிழ்ச்சி

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:24:33 AM (IST)



தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில், மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், ஏலக்கூடத்தில் மீனவர்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர். சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் ரூ.400, விளை மீன் ரூ.550 முதல் 650 வரையும், ஊளி மீன் ரூ.500 முதல் 550 வரையும், சூரை மீன் ரூ.200, கடவு இறால் ரூ.500-க்கும், சூப்பர் நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரையும், ஐலேஷ் கிலோ ரூ.200 வரையும், நகரை ரூ.250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory