» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எந்த மழை வந்தாலும் பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:08:08 AM (IST)

எந்த மழை வந்தாலும் பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு திமுக அரசு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் நிகிலேஷன் நகர், பி& டி காலனி, உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதி அமைக்கப்பட்டபின் எவ்வீத கட்டமைப்பு பணிகளையும் முறையாக செய்யவில்லை.
2021ல் திமுக ஆட்சி அமைத்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதி ஓதுக்கீடுசெய்தும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்கக்கூடாது பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று கூறியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை போல் இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக 9 சென்டி மீட்டா் வரை மழை பெய்துள்ளது. சில காலி மணைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்றப்படி புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதின் வழியாக தண்ணீர் வௌியேறி சென்றுவிட்டது. சில பகுதிகளில் மட்டும் மின்மோட்டாா் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள்.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது தமிழகத்திற்கு அது தான் பொற்காலம். தமிழ்நாட்டில் தமிழா்களின் நலன் மட்டுமின்றி அனைவரின் உாிமையும் பாதுகாக்கப்படுகிறது. எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் எவ்வித அச்சப்பட தேவையில்லை என்று கூறினாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன், மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










