» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீர்நிலைகள் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 31, அக்டோபர் 2025 7:40:32 PM (IST)



கயத்தாறு தாலுகா நீர்நிலைகள் மற்றும் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தின் அருகே குருமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஊருணிகள், நீரோடைகள் உள்ளது மட்டுமின்றி புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிகளவில் மூலிகைகளும் உள்ளன. இந்த மலைச்சரிவு பகுதியில் முடுக்கலான்குளம் பகுதி மக்கள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றன. 

மேலும் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர் இப்பகுதியில் நிவ உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஊராட்சி சார்பில் ஊரணி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனி நபர்கள் சட்டவிரோதமாக நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், ஊரணி பொது பாதை, குடிநீர் குழாய் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலம் வனம் நீநிலை பாதுகாப்பு குழு மற்றும் முடுக்கலாங்குளம் கிராம மக்கள் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory