» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலை : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்!

வெள்ளி 31, அக்டோபர் 2025 4:18:32 PM (IST)



தூத்துக்குடியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக உடைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி விஇ ரோட்டில், சுகம் ஹோட்டல் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையை உடைத்து குடிநீர் பைப் லைன் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டனர்.

தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின் ரோட்டிற்கு திரும்பி செல்பவர்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்ட அந்த சாலையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

இது எல்லாம்Nov 1, 2025 - 12:56:52 PM | Posted IP 104.2*****

மாநகராட்சி துட்டு பயலுக

ராஜாOct 31, 2025 - 04:35:12 PM | Posted IP 104.2*****

விடியா ஆட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory