» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

தூத்துக்குடியில் இன்று சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் புதிய நிர்வாக மேலாளராக தேவா காபிரியேல் ஜெயராஜனை திருமண்டல நிர்வாகியும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி நியமனம் செய்தார். அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஜெப ராஜன் திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்தார். இதில் திருமண்டல நிதி நிர்வாகி அன்பர்தாஸ் உடன் இருந்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் காலனி எழில்நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல மிஷன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










