» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இன்றைய போட்டிகள் விபரம்!

வெள்ளி 31, அக்டோபர் 2025 3:31:25 PM (IST)

தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இன்று மாலை 4 போட்டிகள் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம், வ.உ.சி. துறைமுக ஆணையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 15-வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளன. இந்த போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.

இன்றைய போட்டி அட்டவணை: 

மாலை 5:00 மணி: மகளிர் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் கோட்டயம் ஆல்போன்சா கல்லூரி அணிகள் மோதுகின்றன.

மாலை 6:30 மணி: ஆடவர் பிரிவில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகம் அணிகள் மோதுகின்றன.

இரவு 8:00 மணி: மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி மற்றும் சாலக்குடி சேக்ரட் ஹார்ட் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 9:30 மணி: ஆடவர் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சூர் ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory