» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை!

ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:31:32 PM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் சப் இன்ஸ்பெக்டர் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி அருகே  உள்ள முடிவைதானேந்தல் கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் இவர் தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (48), இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த பரமேஸ்வரி இன்று காலை தனது வீட்டில்  படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory