» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது ‍: ஆயுதங்கள் பறிமுதல்!

ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:59:52 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக மீனவரை வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கீழ அழகாபுரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அங்கு ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த மரியபிரான்சிஸ் ரேவந்த் (28), ஜார்ஜ் ரோடு பகுதியை சார்ந்த இருதய ஸ்டீபன் ராஜ் (31), கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்த பெர்னிக் (23) மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory