» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது : ஆயுதங்கள் பறிமுதல்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:59:52 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக மீனவரை வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கீழ அழகாபுரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த மரியபிரான்சிஸ் ரேவந்த் (28), ஜார்ஜ் ரோடு பகுதியை சார்ந்த இருதய ஸ்டீபன் ராஜ் (31), கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்த பெர்னிக் (23) மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










