» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கிலிருந்து விழுந்தவர் உயிரிழப்பு!

ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:12:00 AM (IST)

கோவில்பட்டியில் மோட்டார் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் 3ஆவது தெரு, ஈபி காலனியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் முத்துராஜ் (56). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory