» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் : 4பேர் கைது
ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:06:45 AM (IST)
தூத்துக்குடியில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கபீர்தாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், போலீசார் ரோச் பூங்கா அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள உப்பளப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் விற்பனைக்காக ஒரு கலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி, வெற்றிவேல் நகர் கார்த்திக் (30), எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மகா வருண்குமார் (18), மட்டக்கடையைச் சேர்ந்த விஷால் (18), புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த தீபக் (19) ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










