» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் : 4பேர் கைது

ஞாயிறு 26, அக்டோபர் 2025 9:06:45 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 இளைஞர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கபீர்தாசன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், போலீசார் ரோச் பூங்கா அருகே நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள உப்பளப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் விற்பனைக்காக ஒரு கலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக மாப்பிள்ளையூரணி, வெற்றிவேல் நகர் கார்த்திக் (30), எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மகா வருண்குமார் (18), மட்டக்கடையைச் சேர்ந்த விஷால் (18), புதுக்கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்த தீபக் (19) ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory