» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

சனி 25, அக்டோபர் 2025 8:29:49 PM (IST)

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சென்ட்ரிங் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மலையரசன் மகன் மாலையப்பன் (55), சென்ட்ரிங் தொழிலாளி இவருக்கு மாரி செல்வி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 
இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் மனைவி அடிக்கடி தகராறு செய்வாராம்.

இன்றும் வேலைக்கு செல்வதால் மனைவி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மாலையப்பன் இன்று மதியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory