» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழா: சிகப்பு சாத்தி சுப்பிரமணிய சுவாமி ரத வீதி பவனி

சனி 25, அக்டோபர் 2025 8:21:55 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 4ஆம் நாளான இன்று சிகப்பு சாத்தி சுப்பிரமணிய சுவாமி  ரத வீதி பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த22ம் தேதி தொடங்கியது. 

இன்று 25ஆம் தேதி 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் தொடங்கி சிகப்பு  சாத்தி அலங்கார தீபாரணைநடந்தது பின்னர் சப்பரத்தில் ரத வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் முருகன் சன்னதியில் உள்ள வள்ளி தெய்வானைக்கு ஆறுமுக  அர்ச்சனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பூஜையை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் சண்முகம் ஆகியோர்  செய்தனர்.  திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி அன்று நடைபெறும். கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபலான சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory