» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது
சனி 20, செப்டம்பர் 2025 8:31:35 AM (IST)
கோவில்பட்டியில் இளஞ்சிறாரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 இளஞ்சிறாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதற்காக தனது உறவினரின் மகனை அழைக்க புதுகிராமம் நாராயண குரு தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கினார்களாம்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கேட்டவுடன் அந்த கும்பல், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, தப்பி ஓடிவிட்டார்களாம். இதில் காயமடைந்த சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து 4 இளஞ்சிறார்களை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










