» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளஞ்சிறாரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் கைது

சனி 20, செப்டம்பர் 2025 8:31:35 AM (IST)

கோவில்பட்டியில் இளஞ்சிறாரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 இளஞ்சிறாரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு புதுகிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதற்காக தனது உறவினரின் மகனை அழைக்க புதுகிராமம் நாராயண குரு தெருவில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த இளஞ்சிறார் கும்பல் அந்த சிறுவனை மறித்து அவதூறாக பேசி தாக்கினார்களாம்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கேட்டவுடன் அந்த கும்பல், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, தப்பி ஓடிவிட்டார்களாம். இதில் காயமடைந்த சிறுவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து 4 இளஞ்சிறார்களை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 5 பேரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory