» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

சனி 20, செப்டம்பர் 2025 8:20:09 AM (IST)

கோவில்பட்டியில் குடும்பத் தகராறில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இளைஞர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்தில் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்தனர்.

விசாரணையில், சடலமாக கிடந்தவர் கயத்தாறு வட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் காளிராஜ் (28) எனத் தெரியவந்தது. இவர் ஏற்கெனவே இரு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத் தகராறில் பைக்கில் நாலாட்டின்புதூர் பெத்தேல் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory