» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் கடல் அலை சீற்றம்: பெண் காயம்!

சனி 20, செப்டம்பர் 2025 8:17:51 AM (IST)

திருச்செந்தூர்  கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தில் சிக்கி பெண் பக்தருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அண்ணா தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி தமிழ்செல்வி (50). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.

அங்கு, கடலில் குளிக்கும்போது அலையின் சீற்றத்தில் சிக்கி தமிழ்செல்விக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ரத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீஸ் ஏட்டுகள் சித்ராதேவி, அந்தோணி சதீஷ் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் தமிழ்செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory