» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வெள்ளி 19, செப்டம்பர் 2025 7:50:31 PM (IST)



தீபாவளிக்கு முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளியின் 30 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகளையும், ஓய்வுக்காலப் பணப் பயன்களையும் வழங்காமல் 24 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பதை கைவிட்டு தீபாவளிக்கு முன்பாகவாவது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இணைந்து கடந்த 33 நாட்களாக தமிழகம் முழுவதும் 22 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory