» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:40:31 AM (IST)
தூத்துக்குடியில் சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஹவுசிங் போர்டு காலனி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரேம்குமார் (27). இவர் டிரை சைக்கிள் ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் வேலைக்கு செல்லாததால் அவரது தந்தை திட்டினாராம்.
இதனால் மன வேதனையடைந்த அவர், கோமஸ்புரம் சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










