» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:40:31 AM (IST)

தூத்துக்குடியில் சுடுகாட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஹவுசிங் போர்டு காலனி, காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் பிரேம்குமார் (27). இவர் டிரை சைக்கிள் ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த சில தினங்களாக அவர் வேலைக்கு செல்லாததால் அவரது தந்தை திட்டினாராம். 

இதனால் மன வேதனையடைந்த அவர், கோமஸ்புரம் சுடுகாட்டில் உள்ள தகன மேடையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory