» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது கார் மோதி விபத்து : கோவில்பட்டியில் பரபரப்பு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:31:33 AM (IST)



கோவில்பட்டியில் அதிவேகமாக வந்த கார் போக்குவரத்து சிக்கனல் நின்று கொண்டிருந்த வாகனம் மோதியதில் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் ஒன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதி. எப்போதும் இந்த பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும். இந்நிலையில் எட்டயபுரம் சாலையில் இன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடுத்துள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்பினை தூக்கி வீசியது 

மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியது. இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் 3 கார்கள், 2 லோடு ஆட்டோக்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது.  அதி வேகமாக வந்த கார் மோதியதில் போக்குவரத்து சிக்னலில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory