» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை!

திங்கள் 1, செப்டம்பர் 2025 3:53:54 PM (IST)



திருச்செந்தூரில் மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,"திருச்செந்தூர், குலசை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதன் அருகே குழந்தைகள் நல மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபர்களால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. சமீப காலமாக சாதி பிரச்சனையாக மாறும் அளவுக்கு எல்லை மீறி போகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிககை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

அதுSep 2, 2025 - 12:43:53 PM | Posted IP 162.1*****

திராவிட ஆட்சி அப்படிதாம்பா , அரசுக்கும், அரசியல்வாதிகள் நடத்தும் மதுப்பான ஆலைகளுக்கு துட்டு வேணும்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory