» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3.5 கோடி மதிப்புள்ள பீடி இலைகள், மாத்திரைகள் பறிமுதல்!

திங்கள் 1, செப்டம்பர் 2025 8:26:54 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3.5 கோடி மதிப்புள்ள பீடி இலைகள், வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துக்கு கிடைத்த தகவலின் படி தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை, வெள்ளப்பட்டி தருவைக்குளம் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருவைகுளம் - வெள்ளப்பட்டி இடையேயான கடற்கரை சாலையில் வந்த மினி லாரி, போலீசாரைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த ஓட்டுநா் இறங்கி தப்பியோடிவிட்டாா்.

சந்தேகமடைந்த போலீசார், மினி லாரியை சோதனை செய்த போது, அதில் 9 பண்டல்களில் வலி நிவாரணி மாத்திரைகள், தலா 35 கிலோ எடை கொண்ட 72 பண்டல்களில் சுமாா் 2,500 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வலி நிவாரணி மாத்திரையின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடி என்றும், பீடி இலை ரூ.50 லட்சம் என்றும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தாெடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory