» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

திங்கள் 1, செப்டம்பர் 2025 8:10:03 AM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல், பீராவை உடைத்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள செயின்ட் ஜான்ஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏராளமான மக்கள் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பிரார்த்தனைக்கு பிறகு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றார்களாம். நேற்று காலையில் ஆலயத்தை திறந்த போது, உண்டியலும், பீரோவும் உடைக்கப்பட்டு சுமார் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்த ஆலயத்தை சேர்ந்த ஜேசன் தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று அதிகாலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஆலயத்தின் பின்புறம் உள்ள கதவை திறந்து உள்ளே நுழைந்து, நிதானமாக தரையில் அமர்ந்து உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது தொடர்ந்து அந்த வாலிபரை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory