» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி நிகிலேசன் நகர் காந்தி நகரில் வசிப்பவர் ராஜன் மகன் ரவி (50), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் அவரது தாயார் சரஸ்வதி வசித்து வருகிறார். அதே தெருவில் உள்ள தனது மூத்த மகன் சுரேஷ் பாபு என்பவர் வீட்டுக்கு தனது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வீட்டை திறக்க வரும்போது. வீட்டில் உள்ள கதவுகளில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூபாய் 2லட்சம் ஆகும். 

இதுபோல் நேற்று இரவு அதே தெருவில் மற்றொரு வீட்டிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் மனைவி பகவதி (62), என்பவர் வசித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி சிவகாசியில் உள்ள தனது மூத்த மகள் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இந்த நகையின் மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும். 

இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் ரூரல் டிஎஸ்பி சுதீர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நகைகள் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory