» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு அன்னதானம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்!
புதன் 27, ஆகஸ்ட் 2025 3:59:24 PM (IST)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தா்மகா்த்தா ராஜா பொியசாமி, தொழிலதிபர் அசோக் பெரியசாமி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பெரியசாமி திடலில் நடைபெற்ற அனைத்து தரப்பினரும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். இதுபோல், முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவில், அண்ணாநகர் பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில்களில் சிறப்பு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
விழாவில் கோவில் செயலாளர்கள் செல்வராஜ், செல்வக்குமார், பொருளாளர் வேல்ச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வம், ரத்தினசாமி, பேச்சிமுத்து, கமிட்டி உறுப்பினா்கள் ஜீவானந்தம், ராஜாமணி, அசோக், ரவீந்திரன், கீதா முருகேசன், நாராயணன், பாஸ்கா், பாலமுருகன், சரவணன், தங்கச்சந்திரன், முருகேசன், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, ராம்குமார், ராஜேந்திரன், அர்ஜூனன், பெரியசாமி, செல்வக்குமார், சித்திரைச்செல்வன், இளஞ்சூரியன், பெரியசாமி, சேகர்மணி, கணேஷ், சண்முகசுந்தரம், முத்துராஜா, இளையராஜா, ராஜ்குமார், மாணிக்கம், இளைஞரணியினர் சக்திகணேஷ், சுரேஷ், மகேந்திரன், கண்ணன், கதிரவன், சுப்புராஜ், இசக்கிமுத்து, பால்ராஜ், பிரபாகரன், கற்குவேல் ராஜ், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, ெபாதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் வேல்பாண்டி, கவுன்சிலா் ஜாக்குலின் ஜெயா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா, பெருமாள்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் கவுன்சிலா் பொியசாமி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










