» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வரத விநாயகருக்கு தங்க கவசம் அணிவிப்பு: திரளான பக்தர்கள் தரிசனம்!

புதன் 27, ஆகஸ்ட் 2025 11:48:46 AM (IST)



தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. 

இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து விநாயகர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதுபோல், தூத்துக்குடி கதிரேசன் கோவில் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு வரத விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு பூர்ணா குதி மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், தேன், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு புனித நீர்  தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் தங்க அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory