» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் 40 சதவீதம் வளர்ச்சி
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:20:43 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு கையாளுவதில் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சமையல் எரிவாயு, மொத்த திரவ சரக்குகளும் அதிக அளவில் கையாளப்பட்டு வருகின்றன சமையல் எரிவாயு துறைமுக எண்ணெய் தளத்தில் கையாளப்படுகின்றன. இந்த தளம் 150 மீட்டர் நீளமும், 13 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது.
இதில் 150 முதல் 230 மீட்டர் நீளம் கொண்ட கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் தற்போது 40 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை கையாள முடியும். இதனை 55 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை கையாளும் வகையில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வ.உ.சி. துறைமுகம் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) கையாளுவதில் வளர்ச்சி பெற்று உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 529 டன் சமையல் எரிவாயு கையாண்டு உள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட (93 ஆயிரத்து 364 டன்) அளவை விட 40.01 சதவீதம் அதிகம் ஆகும்.
இதே போன்று துறைமுகம் மொத்த திரவ சரக்குகள் கையாளுவதிலும் வளர்ச்சி பெற்று உள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 15.24 லட்சம் டன்னாக இருந்த திரவ சரக்குகளின் அளவு படிப்படியாக அதிகரித்து 2024-25-ம் நிதியாண்டில் 18.79 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
மேலும் சமையல் எரிவாயு மற்றும் மொத்த திரவ சரக்கு கையாளுவதில் ஏற்பட்டு உள்ள நிலையான வளர்ச்சி நாட்டின் எரிசக்தி மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்வதில் துறைமுகத்தின் வலுவான அர்ப்பணிப்பை காட்டுகிறது. மேலும் எண்ணெய் தளம் மேம்படுத்தும் பணி முடிவடையும் போது, இந்த தளத்தில் பெரிய வகை கப்பல்களை கையாள முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











அதுAug 27, 2025 - 01:41:42 PM | Posted IP 104.2*****